கோவையில் தாதா அங்கோட லொக்கா இறந்ததும் தப்பிச்செல்ல முயன்ற காதலி: விசாரணையில் பரபரப்பு தகவல்

கோவை: கோவையில் இறந்த இலங்கை தாதாவின் காதலி உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். இலங்கைக்கு விசாரணைக்கு செல்ல போலீஸ் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். கோவையில், கடந்த ஜூலை 4ம் தேதி இலங்கையின் போதை பொருள் கடத்தல், கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த அங்கோடலொக்கா (35) இறந்தார். இவர் மாரடைப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக உடன் இருந்த அவரது காதலி அமானி தாஞ்சி (27) தெரிவித்தார். சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் மருத்துவமனையில் இறந்தது பிரதீப் சிங் என ஆவணங்கள் இருந்தன. ஆனால் அந்த நபர் பிரதீப் சிங் அல்ல, தாதா அங்கோட லொக்கா என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணையை துவக்கினர். துபாய் சென்று பிரதீப் சிங் என்ற பெயரில் புது வாழ்க்கை நடத்த திட்டமிட்டிருந்தார். காதலி அமானி தாஞ்சியையும் தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தபோதுதான் இறந்துள்ளார். லொக்கா இறந்ததும் அமானி தாஞ்சி சொந்த நாட்டுக்கு (இலங்கை) தப்ப முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்ததால் அவரால் இலங்கை செல்ல முடியவில்லை. சேரன் மாநகர் வீட்டை காலி செய்யவும், சொந்த ஊர் செல்லவும் சிவகாமசுந்தரியின் உதவியை அவர் கேட்டுள்ளார்.

அவரும் உதவி செய்ய முன் வந்த நிலையில், அங்கோட லொக்காவின் இறப்பு விவகாரம் வெளியாகி இருக்கிறது. அங்கோட லொக்கா பயன்படுத்திய ஒரு செல்ேபானை காணவில்லை. அமானி தாஞ்சி இந்த வழக்கின் முக்கிய நபராக இருப்பார் என போலீசார் கருதுகின்றனர். அவரின் நெட்வொர்க்கில் இலங்கையின் நிழல் உலக தாதாக்கள் இருக்கலாம் என சந்ேதகம் எழுந்துள்ளது. 5 ஆண்டிற்கு முன் சமயன் என்பவருடன்  அமானி தாஞ்சி நட்பாக இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த பெயரில் உள்ள நபர் நிஜத்தில் இருக்கிறாரா? என கண்டறிய தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் சென்றுள்ளனர்.

Related Stories: