இஸ்லாமாபாத்: கேரளாவில் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிரங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழையால் விமானம் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டு விமானம் பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் உள்ளவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் நேற்று இரவிலிருந்து கன மழைச்சூழலில் செயல்பட்டு வருகிறார்கள்.