டெல்லி: 2020-21-ம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி முன்பை விட குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.3 சதவிகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் - மே மாதங்கள் முதல் உயரத் தொடங்கியது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனாவால் அடுத்தடுத்து பொதுமுடக்கங்கள் அறிவிக்க வேண்டியதாயிற்று.