மாட்ரிட்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று நடப்பு சாம்பியன் ரபேல் நடால் அறிவித்துள்ளார். கொரோனாவால் விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. யுஎஸ் ஓபன் இம்மாதம் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க முன்னணி வீரர்கள் பலரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். உலகின் முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) ஏற்கனவே விலகியுள்ள நிலையில், ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.