அண்ணாநகர்: திருமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 13 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, ஒரு முதியவர் அந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை செய்தார். இதனால் சிறுமி அலறியடித்துக்கொண்டு, தாயிடம் கூறி அழுதாள். இதுகுறித்து சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி பெண்கள் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு ரோந்து வாகனத்தில் கோயம்பேடு போலீசார் விரைந்து சென்று முதியவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர், தான் செய்த குற்றத்தை ஒப்பு க்கொண்டார்.