சொல்லிட்டாங்க...

* ஊரடங்கு இருந்தாலும் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மக்களின் பிரச்னைகளை முன்வைத்து சமூக விலகலுடன் நடத்தும் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் காவல்துறை செயல்படுகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழகஅரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்துவிடக்கூடாது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* சமஸ்கிருதம் ஒரு அழகான மொழி. பல ஆண்டுகளாக இது இந்தியாவை அறிவின் களஞ்சியமாக மாற்றியுள்ளது. சமஸ்கிருதத்தை பிரபலமாக்க அனைவரும் பணியாற்ற வேண்டும். - பிரதமர் நரேந்திர மோடி

* பொது நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமெனில், அதிகாரமிக்கவர்கள் ஆதரவு தர வேண்டும். - காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்

Related Stories: