காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி தலைமையால், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.