கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக 3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார். கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று கிருஷ்ணகிரி செல்லும் முதலமைச்சர், நாளை சேலம் மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ. 63 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோட்டில் ரூ.13 கோடியில் புதிதாக வீட்டுவசதி வாரிய அலுவலகங்கள், வணிக வளாகம் கட்டுவதற்கும் சம்பத் நகரில் ரூ.2.60 கோடி மதிப்பில் மாவட்ட கருவூல அலுவலகம் கட்டுவதற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து, ஈரோடு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனை மையத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர்  மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்து உள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் அவர் திறந்து வைக்கிறார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.

Related Stories: