டெல்டா மக்களின் கம்பீர குரலாக விளங்கியவர்; ஏழை, எளிய மக்களுக்காக அயராது உழைத்தவர் அம்பிகாபதி : ஸ்டாலின் இரங்கல்

சென்னை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு. அம்பிகாபதி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மன்னை மு.அம்பிகாபதி அவர்கள் தனது 83-வது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மு.அம்பிகாபதி, ஏழை எளியவர்களுக்காக, அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைத்தவர்.அவரை இழந்து வாடும் மனைவி, மகள் ஆகியோருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: