சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதல்வர் தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று துவக்கி வைத்தார்.