விதி மீறி செயல்பட்ட காய்கறி கடைக்கு சீல்

ஆலந்தூர்: சென்னையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது, நிபந்தனைகளுடன் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள ஒரு காய்கறி கடையில் சமூக இடைவெளியின்றி வியாபாரம் நடப்பதாக ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் முருகனுக்கு புகார் வந்தது. அதன்பேரில், செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் சுந்தரேசன் ஆகியோர் நேற்று போலீசாருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமூக இடைவெளி இன்றியும், கடைக்காரர் முகக்கவசம் இல்லாமலும் விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Related Stories: