மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் கடந்த மே மாதம் 25ம் தேதியிலிருந்து நேற்று வரை 84,312 பயணிகளுக்கு நடத்திய சோதனையில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல், சர்வதேச முனையத்தில் கடந்த மே மாதம் 9ம் தேதியிலிருந்து நேற்று வரை 15,604 பயணிகளுக்கு நடத்திய சோதனையில் இதுவரை 177 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உள்நாடு முனையத்தில் நேற்று 4 பயணிகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை விமான நிலைய உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இதுவரை 347 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.