சில்லி பாயின்ட்...

* கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஊரடங்கு நேரத்திலும்  டெல்லி அருகே உள்ள காசியாபாத் விளையாட்டு  வளாகத்திற்கு  அடிக்கடி சென்று பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவருடன் இளம் வீரர் ரிஷப் பன்ட்டும் நேற்று முதல்  இணைந்துள்ளார். இருவரும் வலைப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சமூக ஊடகத்தில் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ளார். அதை 2 மணி நேரத்தில் 2லட்சத்து35ஆயிரத்து 945 பேர் பார்த்துள்ளனர்.

* நிதி தொடர்பான விதிமீறல்கள் புகாரில், ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்க மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை விளையாட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளதுடன் அபராதத் தொகையையும் ரூ.250 கோடியில் இருந்து ரூ.85 கோடியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

* 1975ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியில் முக்கிய பங்காற்றிய வீரர் அஷோக் குமாருக்கு, மோகன் பகான் கால்பந்து கிளப் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு சேர்க்கப்படாத நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: