பெங்களூருவில் 7 நாள் முழு ஊரடங்கு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால் அதை தடுக்கும் நோக்கத்தில் பெங்களூருவில்  7 நாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு  8 மணி முதல் ஊரடங்கு அமலில் இருக்கும். பால், காய்கறி உள்ளிட்ட மிகவும் அவசியமான கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். திங்கட்கிழமை (நாளை) இதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்படும். கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: