சென்னை : காமராஜர் பிறந்தநாளை கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டாட வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுவாழ்வில் தூய்மையும், அரசியலில் நேர்மையும், உழைப்பில் உண்மையும் கொண்டு விளங்கிய காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15ம் தேதி வருகிறது. அவரது பிறந்தநாளை தமிழ் மாநில காங்கிரஸ் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த வருடம் உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனாவின் பிடியில் சிக்குண்டு இருக்கும் இந்த காலத்தில், காமராஜர் பிறந்தநாளை ‘கொரோனா நோய்க்கான விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் விதமாக தமாகாவினர் கொண்டாட வேண்டும்.