கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: கொரோனாவில் இருந்து தான் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், அமைச்சர்களில் முதலில் தொற்று உறுதியான உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த ஜூன் 30 அன்று முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில்,  அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன் என்று கூறியுள்ளார். எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படும் செய்திகளை நம்ப வேண்டாம். பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக 15ம் தேதி செய்தியாளர்களிடம் பேச உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில், அமைச்சர் கே.பி.அன்பழகன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள், கோவிட்-19ல் இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் தனியறையில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில்  வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்கிஏஓம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: