சொல்லிட்டாங்க...

இந்த உலகம் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாமா, சுற்றுச்சூழலில் செலுத்தலாமா என தடுமாறுகிறது. ஆனால், இரண்டும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்பவை என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா வைரஸால் பள்ளி, கல்லூரி, பல்கலை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது நிச்சயம் நியாயமில்லாதது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

எனக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மை கிடையாது. ஆனாலும் சில சம்பவங்களால் சுயமாக குவாரன்டைனில் இருக்கிறேன். - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கல்வி என்பது பின்தங்கியுள்ள தன் வாழ்வும், தன் குடும்பத்தின் எதிர்காலமும் சிறக்க ஒவ்வொரு குடும்பமும் நம்பியிருக்கும் ஏணி. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Related Stories: