மதுராந்தகம் அருகே லாரியில் கடத்திய 5,320 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ரூ.16 லட்சம் மதிப்புள்ள 5, 320 லிட்டர் எரிசாராயத்தை. போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தொழுப்பேடு - ஓரத்தி நெடுஞ்சாலை முருங்கை கிராமம் வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அங்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரு லாரி வந்தது. அதில் இருந்த டிரைவர், போலீசாரை கண்டதும், கீழே குதித்து தப்பியோடிவிட்டார். இதை பார்த்த போலீசார் அவரை விரட்டி சென்றனர். ஆனால், பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, லாரியை சோதனை செய்தபோது, அதில் எரி சாராயம் இருப்பது தெரிந்தது. அதன் மதிப்பு, ரூ.16 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 152 கேன்களில் 5,320 லிட்டர் எரிசாராயத்தை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

Related Stories: