ஆட்டோவில் மது கடத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் இருந்து சுண்ணாம்புகுளம் பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற துணை ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட காவலர்கள் தீவிரமாக எளாவூர் இருந்து சுண்ணாம்புகுளம் செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுண்ணாம்புகுளம் மையப்பகுதியான மூல்ரோடு அருகே ஷேர் ஆட்டோ ஒன்று நேற்று வேகமாக வந்தது. போலீசாரை பார்த்ததும் ஷேர் ஆட்டோ டிரைவர் வாகனத்தை விட்டு விட்டு தப்பிவிட்டார். போலீசார் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு ஷேர் ஆட்டோவை கொண்டுவந்தனர். அதில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 624 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

Related Stories: