திங்கள்சந்தை: பீகார்-நேபாள எல்லையில் மாடு கடத்தல் கும்பலால் குமரி துணை ராணுவப்படை வீரர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் இன்று மாலை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே வீரவிளை பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ்(60). கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இளைய மகன் மணிகண்டன் (28). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துணை ராணுவ பிரிவில் (எஸ்எஸ்சி) பணியில் சேர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் 7ம்தேதி இரவு 8 மணிக்கு இவர் தாகூர்கன்ச் மாவட்டம் பீகார் - நேபாளம் எல்லையிலுள்ள கக்காட்டியா சோதனைச்சாவடியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். இவருடன் 2 வீரர்களும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை தடுத்து சோதனையிட்டனர்.