செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது மகன் அரசு ேமல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவரும், அவரது நண்பர் பிளஸ் 2 மாணவரும் வந்து இவரை பைக்கில் அழைத்து சென்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற அவர்கள், தொழிலாளி மகனிடம், ‘பணம் கொடு’’ எனக்கேட்டு கத்தியால் தாக்கினார்களாம். அவர் பணம் இல்லை என்றதால் நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்கி, செல்போனில் போட்டோ எடுத்து, பணம் தராவிட்டால் பேஸ்புக்கில் வெளியிடுவோம் என மிரட்டினார்களாம்.