தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது உணவகங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.  பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரலல் தடுப்பு நடவடிக்கைகளாக, உணவகங்கள கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என அறிவிப்பு வெளியானது. தற்போது கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,

* ஹோட்டல் வாசலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருத்தல் வேண்டும்.

* கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும்

* ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்

* 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* கொரோனா தொற்று அறிகுறி, உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது.

* உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

* வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி கொண்டு நன்றாக கைகளை சுத்தம் செய்த பிறகே உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

* நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.

* உணவகங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

* உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Related Stories: