சேலம்: சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர். சேலம் பூலாவரியில் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்று சேலம் குப்பனூர் அருகே உள்ள சீரிக்காட்டில் 8வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் ஒன்றிணைந்து விளைநிலங்களில் கோரிக்கை அட்டைகள் ஏந்தியும்,