தேனி: தேனி அருகே வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வேலை செய்யவில்லை. டாக்டர்களும் வேறு பல பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக கர்ப்பிணி பராமரிப்பு, தடுப்பூசி பணிகள், இயல்பான மருத்துவ சிகிச்சை பணி அனைத்தும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. குறிப்பாக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் இங்கு கர்ப்பிணிகளை பரிசோதிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மருத்துவ பெட்டகமும் பல மருத்துவமனைகளில் வழங்கப்படவில்லை.