சென்னை : மதுரை சலூன் உரிமையாளர் மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரை, மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்திருப்பவர் மோகன். இவரது மகள் நேத்ரா (15). 9ம் வகுப்பு மாணவி. மோகன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது மகள் நேத்ராவின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.5 லட்சத்தில், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவைகளை வாங்கி, 1,500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார். மோகன் மற்றும் நேத்ராவுக்கு தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு) அறிவித்துள்ளது.
மதுரை சலூன் உரிமையாளர் மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
- எடப்பாடி பழனிசாமி
- அரசு
- தமிழ்நாடு
- சலூன் உரிமையாளர்
- மதுரை
- மகள் நேத்ரா
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
- மதுரை சலூன் கடை