புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தில் ரூ.9,093 கோடி முதலீடு செய்ய அபுதாபியின் முபாதலா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இது கடந்த 6 வாரத்தில் ரிலையன்ஸ் மேற்கொள்ளும் 6வது ஒப்பந்தமாகும். கொரோனா விவகாரத்தால் சீனாவை தவிர்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், இந்திய நிறுவனங்கள் குறிப்பாக ரிலையன்ஸ் அதிக பலனை சந்தித்து வருகிறது. இதுவரை ரிலையன்ஸ் நிறுவனத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்கியூட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆர் நிறுவனங்கள் முதலீடு செய்தன.