சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்சமயம் ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர். அமெரிக்க மண்ணிலிருந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லும் இந்தத் திட்டம் மே மாதம் 27 மேற்கொள்ளப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
விண்வெளி வீரர்களைத் தாங்கிச் செல்லும் விண்கலம் (Spacecraft) மற்றும் ஏவூர்தி (Rocket) ஆகிய இரண்டையுமே தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் தயாரித்துள்ளது.