சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குணமடைந்தனர்

சென்னை : சென்னை மாநகராட்சியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 510 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5947  பேர் குணமடைந்துள்ளனர். 89 பேர் உயிரிழந்துள்ளனர். 5504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த 80 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி பார்த்தல் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மொத்தம்  பாதிக்கப்பட்டவர்களில் 60.06 சதவீதம் ஆண்கள், 39.92 சதவீதம் பெண்களும்,  திருநங்கை 3 பேர்.மண்டலம் வாரியாக, ராயபுரத்தில் 2145 பேர், கோடம்பாக்கத்தில் 1,525 பேர், திருவிக நகரில் 1285  பேர், தேனாம்பேட்டையில் 1262 பேர், தண்டையார்பேட்டையில் 1160 பேர், அண்ணாநகரில் 975 பேர், வளசரவாக்கத்தில் 758 பேர், அடையாரில் 653 பேர், அம்பத்தூரில் 484 பேர், திருவொற்றியூரில் 344 பேர் மாதவரத்தில் 256 பேர், மணலியில் 156 பேர், சோழிங்கநல்லூரில் 197 பேர், பெருங்குடியில் 203  பேர், ஆலந்தூரில் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயது வாரியாக, ஆண்களில் 9 வயது வரை உள்ள 268 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 525 பேர், 20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 1467 பேரும், 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 1554 பேரும், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 1332 பேர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 1019 பேர், 60 முதல் 69 வயது வரையுள்ள 509 பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 202 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெண்களில் 9 வயது வரை உள்ள 234 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 423 பேர், 20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 989 பேர், 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 934 பேரும், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 813 பேர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 658 பேர், 60 முதல் 69 வயது வரையுள்ள 359 பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 157 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: