இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடரை நடத்துவதற்கான வரிச்சலுகையை பிசிசிஐ மத்திய அரசிடம் பெறாததால், இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடரை நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்காக வரிச் சலுகை பெற பிசிசிஐ-க்கு மே 18 வரை ஐசிசி காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இதுவரை பிசிசிஐ வரிச்சலுகை பெறவில்லை. இதனால் ஐசிசி சுமார் ₹756 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.