கொரோனா பரவி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தமிழகத்தின் சூழல் குறித்து கேட்டறிந்தார் சோனியா காந்தி

சென்னை : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினை நலம் விசாரித்துள்ளார். அத்துடன் தமிழகத்தின் சூழல் குறித்து கேட்டறிந்த சோனியா காந்தி, கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில், தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தினார்.  திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, தமிழகத்தின் நிலைமையையும் கேட்டறிந்துள்ளார். அப்போது சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் திமுக ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நாட்டு மக்கள் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் மீள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்து, தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில், 2900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: