காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கலர் சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்கைளை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 144 தடை உத்தரவு போடப்பட்டதோடு மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மற்றும் சாராய கடைகளை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் கொன்னக்காவலி கிராமத்தில் சட்டவிரோதமாக பாக்கெட் மற்றும் பாட்டில் சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக கோட்டுச்சேரி போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர்.