கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் பலி: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்வு: 8,56,917 பேருக்கு பாதிப்பு

டெல்லி: உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 202 நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை  42,107 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,35,587 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,56,917-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து  65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 124 பேர் குணமடைந்துள்ளனர். இதனை போல், கொரோனா அதிகம் தாக்கிய இத்தாலியில் 12 ஆயிரத்து 428 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 1,05,792 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 12,384 பேர் சிகிச்சையில் குணமான நிலையில், நேற்று ஒரே நாளில் 837 பேர் குணமடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் 8,464 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 95 ஆயிரத்து 923 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,867 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,88,633-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 726 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: