டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 33,116 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இன்று இதுவரை 2,865 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 8,23,197 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,74,333 பேர் குணமடைந்தனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.