காவல்துறையின் கட்டுக்குள் வந்தது மேலப்பாளையம்: நெல்லையில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் அதிரடி

நெல்லை: நெல்லை மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது.

102 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதில் மேலப்பாளையம் மண்டத்தில் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மேலப்பாளையம் ஊர் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது. மேலப்பாளையத்திலிருந்து வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் யாரும் வெளியே வரவும் அனுமதி இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: