பிரிட்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 200 நாடுகளை சேர்ந்த 39,016 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சரியாக 3 மாதக் கடைசியில் உலகம் முழுவதும் 8 லட்சம் மக்களை பாதித்து இருக்கிறது. WHO கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி கொரோனா வைரஸ் பற்றிய செய்தியை உறுதிசெய்தது. சரியாக 3 மாதத்தில் உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் பீதியில் வைத்திருக்கிறது. தற்போது கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது.