சொல்லிட்டாங்க...

நம்பிக்கை என்ற பெயரில் சமூக விலகல் விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் மக்கள் ஒன்று கூடுகின்றனர். - பிரதமர் நரேந்திர மோடி

பேரிடர் காலங்களில், அரசியல் எல்லை கோடுகளை கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட திமுக ஒருபோதும் தயங்கியதில்லை. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை பொறுத்து, ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா என்பது தீர்மானிக்கப்படும். - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

அனைத்து தொழில்களும் முடங்கி போயிருப்பதால் ஏற்படப்போகும் பொருளாதார சீர்குலைவை எதிர்கொள்ள மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

Related Stories: