தேனி : தேனி மாவட்டம் போடிநாயக்கநல்லூரில் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஆத்திரத்தில் சாலையில் சென்ற மூதாட்டியைக் கடித்து கொலை செய்துள்ளார். கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கணக்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார்.