கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமம், மாந்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு கடையின் மேலாளர் ராக்கம்பாளையத்தை சேர்ந்த துளசிராமனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கடைக்குள் சோதனை செய்ததில், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த ₹1 லட்சம் மதிப்புள்ள 10 பெட்டி மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும், கடைக்குள் இருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் உடைத்து மர்ம நபர்கள் எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்தது.