நன்றி குங்குமம் முத்தாரம்
*காணாமல் போன எறும்பு 6 மாதம் கழித்து வந்தாலும், மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டு கொள்ளும்.
*ஒரு கிலோ எடை கொண்ட தேனை சேகரிக்க தேனீக்கள் 6.68 லட்சம் பூக்களைச் சந்திக்கின்றன.*ஒரு பட்டுப் பூச்சி கூடு சுமார் 3 ஆயிரம் அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகின்றது.*40 மின்மினிப் பூச்சிகள் சேர்ந்தால் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி கிடைக்கும்.*பூமியில் இதுவரை அறியப்பட்ட பள்ளத்தாக்கு களைவிட மிகப்பெரியது செவ்வாய் கிரகத்தில் உள்ளது. 2500 மைல் நீளம்.*7 மாடி கட்டிடத்திலிருந்து விழும் பூனையை விட, குறைவான உயரத்தில் இருந்து விழும் பூனைக்கே அதிக காயம் ஏற்படும்.*அதிகம் சிரிப்பவர்களுக்கு ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருப்பதால் ஆரோக்கியம் வலுப்பெறும்.*ஒரு டன் காகிதம் தயாரிக்க 17 பெரிய மரங்களை அழிக்க வேண்டும்.