சென்னை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய கோரி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வரும் துணை நடிகை மற்றும் நடன இயக்குநர் மீது நடிகை ரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வளசரவாக்கத்தில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தெலுங்கு திரையுலகில் துணை நடிகையான கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் என்னைக் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.