மதுரை: ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழ் வளர்ச்சித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழர் நாகரீகம், பண்பாடு, வரலாறு, மருத்துவம் மற்றும் கோயில்கள் தொடர்பாக ஏராளமான கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். இவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆன்லைன் மூலம் பழமையான ஓலைச்சுவடிகள் விற்பனை நடந்து வருகிறது.