சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தில் பரிந்துரை செய்யப்பட்ட 6,028 விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:2020ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டியிடம் 6028 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் கொடுத்துள்ளனர். ஆனால் இந்திய ஹஜ் கமிட்டியால் தமிழகத்திற்கு 3,736 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.