தமிழகத்தை சேர்ந்த 6,028 ஹஜ் பயணிகளின் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தில் பரிந்துரை செய்யப்பட்ட 6,028 விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:2020ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டியிடம் 6028 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் கொடுத்துள்ளனர். ஆனால் இந்திய ஹஜ் கமிட்டியால் தமிழகத்திற்கு 3,736 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படாத, ரத்து செய்யப்பட்ட, பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே தமிழக ஹஜ் கமிட்டி பரிந்துரை செய்துள்ள 6,028  விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொண்டு இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறைக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: