புதுடெல்லி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் திமுக சார்பில் கடந்த 20ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “உள்ளாட்சி தேர்தலின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், அதேப்போல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.