எம்இ, எம்டெக் நுழைவுத் தேர்வு: சென்னையில் விசாரணை மையம்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் எம்சிஏ, எம்பிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 29ம் தேதியும் மார்ச் 1ம் தேதியும் நடக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சென்னையில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் 27, 28ம் தேதிகளில் விசாரணை மையங்கள் செயல்படும்.இந்த மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தொடர்பு கொண்டு  தங்கள் சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களை 044-22358314, 22358412  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: