'நிலம் பூத்து மலர்ந்த நாள்'- எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

டெல்லி : தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான சாகித்ய அகாடமியால், நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு நாட்டிலேயே மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை வழங்கி வருகிறது. 1955ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அதே போல, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவல் `நிலம் பூத்து மலர்ந்த நாள். இந்த மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் மலையாளத்தில் வெளியான போனபோது வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.  குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. மேலும், பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம்பெற்றிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்ட இந்த நாவலை செம்மையாக தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மொழியாக்கம் செய்திருந்தார். இந்த மொழியாக்க விருதுக்குச் செம்பு பட்டயத்துடன் 50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும்.

Related Stories: