வாலிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்த பிரவீன்குமார் (21), கடந்த 14ம் தேதி இரவு தனது நண்பர் விக்கி என்பவருடன், மதுரவாயல் விடுதியில் வசிக்கும் மற்றொரு நண்பர் மோகன் என்பவரை பார்க்க சென்றார். அங்கு மோகனை பார்ப்பதற்கு விக்கி முதல் மாடிக்கு சென்றார். கீழே நின்றுகொண்டிருந்த பிரவீன்குமாரை, பைக் திருட வந்தவர் என கருதிய 8 பேர் கும்பல் சரமாரி தாக்கினர். இதில், பிரவீன்குமார் இறந்தார். போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (25), சார்லஸ் (25), சாமுவேல் (18) மற்றும் 3 சிறுவர்கள் என 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நொளம்பூரை சேர்ந்த நிதிஷ் பாபு (34), செங்கல்பட்டை சேர்ந்த முஜிபூர் ரகுமான் (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

* சோளிங்கர் பகுதியை சேர்ந்த யோகசுந்தர் (23), செங்குன்றத்தில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை வழியாக பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்து இறந்தார்.

* புளியந்தோப்பு தட்டான் குளத்தை சேர்ந்த சுதாகர் (25) என்பவரை பீர் பாட்டிலால் சரமாரி தாக்கிய அதே பகுதியை சேர்ந்த ரகுபதி (27) மற்றும் மணிகண்டன் (27) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

Related Stories: