பெல்ஜியம்: பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் கட்டப்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலய சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் உள்ள செயிண்ட் பாவோ கிறிஸ்தவ தேவாலய சுவரினை இறந்து போன மனித எலும்புகளை கொண்டு கட்டியுள்ளனர். இந்த சுவரினை பார்த்து வியந்த ஆராய்ச்சியாளர்கள், அந்த எலும்புகூடுகளை ஆராய்ச்சி செய்த போது அதற்கு சுமார் 500 வயது இருக்கும் என தெரிவித்துள்ளனர். செயிண்ட் பாவோவில் 942- ல் உள்ள செயிண்ட் பாப்டிஸ்டின் தேவாலயத்தை புதுபித்து செயிண்ட் பாவோ என்ற புதிய தேவாலயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தேவாலயமானது 1566 ஆம் ஆண்டு சில காரணங்களால் இடிக்கபட்டுள்ளது. பின்னர் இடிக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் முன் உள்ள கல்லறையில் புதிய தேவாலயம் ஒன்றை கட்ட முடிவெடுத்துள்ளனர். இதற்கென அந்த கல்லறையை முழுவதும் அகற்றி அங்கு புதைக்கப்பட்டுள்ள மனித எலும்புகளை கொண்டு புதிதாக உருவாக்கபட்ட தேவாலயத்தின் சுவரில் புதைத்து கட்டியுள்ளனர்.