மணத்தக்காளி வற்றல் குழம்பு

செய்முறை:தக்காளியை நறுக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டுப் பொரிய விடவும். நன்கு பொரிந்தபின் மணத்தக்காளி வற்றல், கறிவேப்பிலையை போடவும். வற்றல் வெடிக்கும்போது நறுக்கிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்த தக்காளியை சேர்க்கவும்.அனைத்தும் வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீரை சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்துக்கொள்ளவும். ருசிக்கேற்ப சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம். இத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். நன்கு கொதித்ததும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இறக்கி வைக்கவும்

Related Stories: