மேகாலயாவில் உலகின் மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள ஜெய்ன்டியா மலைப்பகுதியில் ஸ்காட்லாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த குகையில் அவர்கள் ஆராய்ச்சி செய்த போது, புதியவகை மீன்களைக் கண்டனர். இந்த மீன்கள் இமாலய ஆறுகளில் உள்ள கோல்டன் மஷீர் வகை மீன்களுடனான பண்புகளை ஒத்திருந்தன. ஆனாலும் இவை தனி இனமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.