சென்னை: கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால், மறுதேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மங்கலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்காக நாளை நடைபெறுவதாக இருந்த மறைமுகத் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.